சென்னை: திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) பேசியதாவது: மாரிமுத்து: பட்டா வழங்குவதில் இன்னும் பிரச்னைகள் இருக்கிறது. ஏரி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அங்கு போய் பார்த்தால் ஏரியை காணவில்லை. எந்த இடங்களில் இருந்தாலும் மாவட்ட கலெக்டர் மூலம் அங்கு வாழ்கிற மக்களுக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: பல காலங்களாக ஒரு இடத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் பணியை கலைஞர் தான் தொடங்கி வைத்தார்.