சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி (திமுக) பேசியதாவது: நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: சென்னையை சுற்றி 32 கி.மீ., தூரத்துக்கு பெல்ட் ஏரியா என்று சொல்லி, 1962ம் ஆண்டே நகரத்தை ஒட்டிய இந்த பகுதிகளில் பட்டா வழங்க தடை இருக்கிறது. இடம் நெருக்கடியாக இருப்பதால் அரசு புறம்போக்கு நிலங்கள் அரசுக்கு வேண்டும் என்று இந்த தடையை விதித்துள்ளனர். இதில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்று கலைஞர் முதல்வராக இருந்த போது, நத்தத்தில் வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.