சென்னை: அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் வெற்றி அழகன், எம்.கே.மோகன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மது பிரசாத், பகுதி செயலாளர் வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.