சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம அரசு மனநல மருத்துவமனையில், ஆண்கள், பெண்கள் என 900க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல்வேறு வகையான மன நல பிரச்னைகளால் சிகிச்சைப் பெறுபவர்களில், பெரும்பாலானோர் குணமடைந்த பின்னர் வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை கற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 5 பெண்கள், 2 ஆண்கள் ஹாட் பிரெட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் ‘பேக்கரி’ நடத்தி வருகின்றனர்.