பழநி : பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் இரும்பை பிரிப்பதற்காக குப்பைக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.பழநி அருகே நெய்க்காரப்பட்டி செல்லும் வழியில் தனியார் மில் உள்ளது. இதன் எதிர்புறம் உள்ள குளக்கரையில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி மற்றும் அ.கலையம்புத்தூர் ஊராட்சி பகுதிகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. தவிர, இறைச்சி கழிவுகள், உயிரிழந்த கால்நடைகள் போன்றவையும் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இந்நிலையில் குப்பைகளில் உள்ள இரும்பு துகள்கள், செம்புக்கம்பிகள், தகரம் போன்றவற்றை பிரித்தெடுப்பதற்காக சிலர் குப்பைகளுக்கு தீவைத்து விடுகின்றனர்.