சென்னை: கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு ரயில்வேக்குட்பட்ட பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் திறந்து வைத்து, பார்வையிட்டார்.60 படுக்கைகள், 8 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் இந்த வார்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் அச்சத்தை போக்க சுவர்களில் கண்களை கவரும் வண்ண ஓவியங்கள், தொலைக்காட்சி, விளையாட்டு பொருட்கள் உள்பட குழந்தைகள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.