திருமலை: திருமலையில் சுற்றுச்சூழல் மாச அடைவதை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு 35 எலெக்ட்ரிக் கார்கள் வாங்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் வசதிக்காக, 60 கார்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், 40 கார்கள் உள்ளூர் பயன்பாட்டுக்காகவும், 20 கார்கள் நீண்ட தூர பயணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கார்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு மாற்றாக பேட்டரியால் இயங்கும் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது.