நன்றி குங்குமம் தோழி
கொள்வாரா... மாட்டாரா என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது’ என்று கூறினார்கள். அதை கேட்ட எங்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்கள் அடுத்து சொன்னதுதான் எனக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ‘அதனால் எங்கள் 2வது மகனுக்கும் மருமகளுக்கும் திருமணம் செய்யலாம்’ என்றனர். எங்களால் எதுவும் பேச முடியவில்லை. ‘யோசித்துவிட்டு சொல்கிறோம்’ என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.
அதற்கு என் மாமியார், ‘‘யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து தருவதைவிட எனது மகனுக்கு திருமணம் செய்து தந்தால் என் மருமகளை நன்றாக பார்த்துக் கொள்வான். எனது பேரனையும் நன்றாக பார்த்துக் கொள்வான். அது மட்டுமல்ல நாங்களும் கூடவே இருப்பதால் எங்கள் மருமகளையும் பேரனையும் நன்றாக கவனித்துக் கொள்வோம். என் பிள்ளையிடம் பேசிவிட்டேன்.அவனும் சம்மதம் தெரிவித்து விட்டான்’’ என்று சொன்னார்.எனது மைத்துனர் என்னைவிட இரண்டு வயது பெரியவர். இப்போது அதுவல்ல பிரச்சனை. இன்னொரு கல்யாணத்திற்கு நான் தயங்குவதே, ‘திகட்ட திகட்ட கிடைத்த அன்பு தந்த என் கணவரை மறந்து இன்னொருவரை எப்படி திருமணம் செய்வது’ என்பதுதான். அது அவருக்கு செய்யும் துரோகம் தானே.அதுமட்டுமல்ல... எனது மைத்துனரை திருமணம் செய்தால், இந்த சமூகத்தில் என்னால் இயல்பாக நடமாட முடியுமா? இரண்டு தரப்பு உறவினர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். யாராவது எனது கணவரை பற்றி பேசினால் இவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்றெல்லாம் நிறைய யோசிக்கிறேன்.எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.திருமணமான காலத்தில் மைத்துனர் என்னிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டார். கிண்டல், கேலி கூட செய்தது கிடையாது. அண்ணி என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை சொன்னதில்லை. இப்போது அவரை திருமணம் செய்வது சரியாக இருக்குமா? என் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்குமா? சமூகத்தில், உறவுகளிடம் என்னால் இயல்பாக நடந்து கொள்ள முடியுமா? அவர்கள் என்னை மதிப்பார்களா? என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள் தோழி...இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.நட்புடன் தோழிக்கு,உங்கள் கேள்வியை படித்து பார்த்ததில் இருந்து சொல்கிறேன். நீங்கள் 2 விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று, உங்கள் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். 2வது உங்களையும் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 2 விஷயங்களுக்கும் உங்கள் கணவரோட தம்பி சரியாக இருப்பாரா என்பதைத்தான் நீங்கள் யோசிக்க வேண்டும்.அப்படியானால் நீங்கள் அவரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்தான். உங்களுக்கு பிடித்திருந்தால் அவரை தேர்ந்தெடுப்பதில் தப்பு ஒன்றும் இல்லை. இதில் குழப்பமடைய தேவையில்லை.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. நீங்கள் யாரை மறுமணம் செய்தாலும் பேசுகிறவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். கட்டாயம் எதிரில் பேச மாட்டார்கள். அதனால் அது பற்றி பிரச்னை இல்லை.உங்க கணவரோட தம்பியை நீங்கள் அப்படி பார்க்கவில்லை. அவரை கணவராக நினைக்க முடியவில்லை என்றால்தான் அது சிக்கல். அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.உங்கள் மைத்துனர் நல்லவராக இருந்தாலும், என்னதான் அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக இருந்தாலும் மற்றவர்களுக்காக அவரை திருமணம் செய்யும் முடிவை எடுக்க வேண்டாம்.ஏனெனில் உங்கள் கணவர், அவரது தம்பியை பற்றி உங்களுக்கும் நன்றாக தெரியும். எது நல்லது… கெட்டது என்பது உங்கள் அறிவுக்குத்தான் தெரியும். ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தோன்றினால் அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.உங்கள் மனதுக்கு பிடித்திருந்தால் தாராளமாக திருமணம் செய்யுங்கள். மற்றவர்களை திருமணம் செய்தால் என்னென்ன பிரச்னை வரும், மைத்துனரை திருமணம் செய்தால் என்ன பிரச்னை வரும் என்று யோசித்து பாருங்கள்... ஒப்பிட்டு பாருங்கள்... உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசனை பண்ணுங்கள். வெளியில் என்றால் ஏற்கனவே திருமணம் ஆனவர் கூட மாப்பிள்ளையா வரலாம்.அப்போது உங்களுக்கு, அவருக்கு குழந்தைகள் இருந்தால் அதை கவனிக்க வேண்டிய கடமையும் இருக்கும். இது எல்லாமே யூகம்தான் எதையும் 100 சதவீதம் கணிக்க முடியாது. உங்க மனது உங்களுக்குத்தான் தெரியும். மற்றவர்களுக்காக முடிவு எடுக்கக் கூடாது. அவர் நல்லவரா உங்க மனதுக்கு பிடித்திருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். உங்களையும் உங்கள் குழந்தையையும் நல்லா பார்த்துக் கொள்ள யாரால முடியும் என்று நினைக்கிறீர்களோ அவர்களையே தேர்ந்தெடுங்கள்.அவர் உங்க கணவரோட தம்பியா இருக்கணும்னு அவசியம் இல்லை. வெளி ஆளாக கூட இருக்கலாம். ஆனால், ‘உங்களுக்கு உங்க கணவரோட தம்பியை திருமணம் செய்ய விருப்பம் இருக்கு... மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் தயக்கமாக இருக்கு’ என்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது தேவையில்லாத தயக்கம்.புறம் பேசுகிறவர்கள் யாரும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்லப் போவது இல்லை. நமது கஷ்டத்திலும் பங்கு எடுத்துக் கொள்ள போவது இல்லை. எனவே உங்களுக்கு பிடித்திருக்கிறது, சரியென்று தோன்றினால் உங்கள் கணவரின் தம்பியை நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.இன்னொரு முக்கியமான விஷயம் மறுமணம் செய்வதெல்லாம், இறந்து போன கணவருக்கு செய்யும் துரோகம் கிடையாது. உங்கள் மீது அன்பு வைத்திருந்த கணவர், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். மறுமணம் செய்தால் அவர் மட்டுமல்ல, நல்லவர்கள் எல்லோரும் வாழ்த்துவார்கள். நன்றாக யோசித்து சீக்கிரம் நல்ல முடிவை எடுங்கள்.தொகுப்பு: ஜெயா பிள்ளைவாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி‘என்ன செய்வது தோழி?’குங்குமம் தோழி,தபால் பெட்டி எண்: 2924எண்: 229, கச்சேரி சாலை,மயிலாப்பூர், சென்னை - 600 004