சேலம்: சேலத்தில் ஓய்வு இல்லாமல் வேலை வழங்குவதாக கூறி விஷப்பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முருகன். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். ஸ்டேசன் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘‘ஓய்வே இல்லாமல் இரவு பகலாக வேலை கொடுக்கப்படுகிறது.