சென்னை: திருவாடானை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கருமாணிக்கம் பேசும் போது, ‘ராமநாதபுரம் பெரிய கண்மாய் தூர்வாரி மராமத்து பணிகள் செய்து தர வேண்டும்’ என்றார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘ஒரு காலத்தில் ஏரிகளில் பசுமை காடுகளை அமைக்க வேண்டும் என்று கருவேல மரங்களை நட்டு விட்டார்கள். அப்போதே நான் எதிர்த்தேன். இப்போது, அதன் விளைவு என்னவென்று கேட்டீர்கள் என்றால், கருவேல மரங்கள் பசுமையாகிறது மட்டுமல்ல, பயிர்களை நாசமாக்கி விடுகிறது.