திருச்சி: திருச்சியில் அரிசி கடைகள், கிடங்குகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கர்நாடகாவின் புகழ் பெற்ற மன்சுகொண்ட நவாப் நிறுவனம் பெயரில் போலி அரிசி விற்பனை எனப் புகார் எழுந்தது. புகாரை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மார்க்கெட், எடத்தெரு பகுதிகளில் சோதனை நடத்தபட்டது. சோதனையின் முடிவில் 50,000 கிலோ வரை போலி மன்சுகொண்ட அரிசி பறிமுதல் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியது.