கோவை: சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ஐ.டி.ஐ. மாணவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். இவருக்கும் வெள்ளலூரை சேர்ந்த வெள்ளிமலை (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வெள்ளிமலை ஐடிஐ தொழில் கல்வி முதலாம் ஆண்டு படித்து வந்தார். செல்போனில் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து பல இடங்களிலும் தேடி வந்தனர்.