கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோனிகா(32). இவரது கணவர் நெல்சன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில், வணிக நிறுவனம் நடத்தி வரும் எலத்தகிரி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பியிடம், கடந்த 2012ம் ஆண்டு ₹30 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். இதற்காக தங்களின் நிலத்திற்கான பவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சொத்தை மீண்டும் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு சோனிகா கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சகோதரர்கள் வட்டி- அசல் என ₹1 கோடியே 27 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தான் வாங்கிய கடனுக்கான வட்டியுடன் சேர்த்து தருவதாகவும், தனது நிலத்தை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என சோனியா கேட்டதாகவும், அதற்கு அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.