ஆவடி: பைக் மீது கார் உரசியதுபோல் சென்றதால் தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கி ஹெல்மெட்டால் அடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருமுல்லைவாயல் சாந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் பரத்குமார்(52). இவர், சென்னையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி உறவினரை பார்த்துவிட்டு திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். ஆவடி சி.டி.எச் சாலை தனியார் பள்ளி அருகே பைக்கில் வந்தார். அப்போது, பின்னால் வந்த கார் இவரது பைக்கை உரசுவது போல் சென்றது. இதனையடுத்து பரத்குமார், காரில் இருந்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.