மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த கொள்கையை பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக ஆதரிக்கிறது. இழப்பில் இருந்த வங்கிகளை ஒன்றிய அரசு அரசுடமையாக்கியது. ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்.