புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவினாஷ் மெரோட்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சூதாட்டம், பெட்டிங், பந்தயம் கட்டுதல் போன்றவைகளுக்கு பல மாநில அரசுகள் தடை விதித்துள்ள போதிலும், இந்தியாவில் ஏராளமான இணையதளங்கள் மூலமாக ஆன்லைன் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. இவை அனைத்திற்கும் சட்டப்பூர்வமாக தடை விதிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, ஒன்றிய, டெல்லி மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.