சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அதிகாரி ஆய்வு

திருவள்ளூர்: சென்னை அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சென்னை கோட்ட புதிய மேலாளர் கணேஷ், பிரத்யேக ரயில் மூலம் சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தார். அப்போது, ஸ்டேஷன் மாஸ்டரின் அறை சுத்தமாக வைத்து கொள்ளவும் நடைமேடையில் மேடு பள்ளத்தை சரி செய்யவும், பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க பயணிகளை அறிவுறுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், ரயில்பயணிகள் சங்கங்களின் நிர்வாகிகள், மணவாளநகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்றும், அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

Related Stories: