கேங்மேன் பணி ஒருவார காலம் இறுதி வாய்ப்பு

சென்னை:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர் நலன் பிரிவின் தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கேங்மேன் பணிக்கு தேர்வானவர்கள் கடந்த மார்ச் 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளரை அணுகி, பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் சிலர் தற்போது வரை பணியில் சேரவில்லை என தெரிய வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கேங்மேன் பணிக்கு தேர்வாகி, சேராதோருக்கு ஆக.24ம் தேதியில் இருந்து ஒரு வார காலம் இறுதி வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பின்னும் பணியில் சேராதவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: