நேர்மை நகர் மயான பூமி பராமரிப்பால் இயங்காது

சென்னை: திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயான பூமியில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் திருவிக நகர் (தாங்கல்) மயான பூமியை பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம் 64வது வார்டு நேர்மை நகர் எல்பிஜி மயானபூமி மற்றும் எரியூட்டகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை மயான பூமி இயங்காது. மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி ஆகிய நாட்களில் வார்டு 68ல் உள்ள திருவிக நகர் (தாங்கல்) மயானபூமியை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: