வால்பாறை: வால்பாறை அருகே மரக்கிளையில் சிக்கிய கரடி, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மரத்தில் இருந்த தேன் கூட்டை சுவைக்க சென்ற 2 கரடியில், ஒரு குட்டி கரடி மரக்கிளை ஒன்றில் சிக்கியது. மரத்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்தது. சம்பவம் அறிந்த வனத்துறையினர் மரத்தை வெட்டி, மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்டனர். பின்னர் ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள வனத்துறை முகாமில் கூண்டில் அடைத்து நேற்று இரவு சிகிச்சை அளித்தனர்.