சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அரசின் சட்டத்தை எதிர்க்கும் 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கிறது.