பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் கேசவராஜ்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளுக்கு பணிதள பொறுப்பாளராக நியமிக்கக்கோரி, அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சு (29) என்ற பெண் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார்.
அதன்டிப்படையில், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) நடவடிக்கை மேற்கொண்டு மஞ்சுவை பணிதள பொறுப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இருப்பினும், ஊராட்சி செயலாளர் நரசிம்மன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் செயல்படுவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அதே நபரை வைத்து வேறொரு பெயரில் பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.