ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மருத்துவ செவிலியர்கள் மற்றும் என்சிடி பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தொண்டு நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.