சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி (அதிமு.க) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தொடர்வது குறித்து 2021-2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டில் அம்மா உணவக திட்டத்தின் செலவினத்திற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.