டோக்கியோ: கொரோனா அறிகுறி காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் எனவும் அவருக்கு பதிலதக தேக் சந்த் ஏந்துவாா் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப். 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.