சென்னை: கோடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரை சந்தித்து பேசிய தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவைவில் விவாதிக்கக்கூடாது என கூறும் அதிமுக தான் முதலில் பேரவையில் அது பற்றி பேசியதாக குறிப்பிட்டார். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த விவகாரத்தை அணுகி வருவதாக அமைச்சர் விமர்சித்தார்.