தலைமறைவாக இருந்த ரவுடி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யும்படி எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார்.அதன்படி, ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த காஞ்சிபுரம் நேரு நகரைச் சேர்ந்த துரைபாபு (30) என்பவரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: