புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன்வயல் அருகே ஒரு திடலில் கடந்த 14ம் தேதி கராத்தே தகுதிப்பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியை சேர்ந்த கராத்தே வீரர் பாலாஜி (வயது 19) என்பவர் கையில் துணியை சுற்றி அதில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்துக்கொண்டு ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தீப்பொறி பாலாஜி உடலில் பரவியதையடுத்து சக வீரர்கள் தீயை அணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில், பாலாஜி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.