நெல்லை: மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும் என மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன்; மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும். மசோதாவின் சரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம். மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.