வடசென்னை அனல் மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே?: அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்யாசம் மட்டும் 2.38 லட்சம் டன் ஆகும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Related Stories: