குமரி அனந்தன் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி (78) நேற்று அதிகாலை மறைந்தார். இதுகுறித்து தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுத்தவர் எனது தாயார். என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக தாயாரின் உடல் வைக்கப்பட்டு இன்று உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விடுத்த இரங்கல் செய்தியில், ‘‘கிருஷ்ணகுமாரியின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். இத்தகைய தருணத்தில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து  கொள்கிறேன்.  மு.க.ஸ்டாலின் இரங்கல்: மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தனுக்கும் தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: