பண்ருட்டி: பண்ருட்டி சென்னை சாலை மேம்பாலத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக பாலத்தின் மேலே உள்ள மின் விளக்குகள் இரவில் எரியாமல் உள்ளது. இந்த பாலத்தின் பாதிப் பகுதி பண்ருட்டி நகராட்சியும், பாதிப்பகுதி லட்சுமி நாராயணபுரம் (எல்.என்புரம்) ஊராட்சியை சார்ந்ததாக இருக்கிறது. எனவே பாலத்தின் மேலேயும், கீழேயும், சர்வீஸ் சாலையிலும் மின் விளக்குகள் எரியாமல் இரவு நேரத்தில் இருட்டாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலத்தின் கீழே உள்ள கடை வியாபாரிகளின் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.