சென்னை: பெண் எஸ்.பி பாலியல் புகாரில் எனக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று சிறப்பு டிஜிபி கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது சிறப்பு டிஜிபி தரப்பில் இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியால் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது என அவர் கூறியுள்ளார்.