சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 200 வாகனங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கோமாளிப்பட்டி கண்மாய் திடலில் காளைகள் களமிறக்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.