திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வுக்கூட நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுனர்- 6, ஆய்வக நுட்புநர்- 6, நுண்கதிர் வீச்சாளர்- 6 பேரும் தேவைப்படுகிறார்கள்.