வால்பாறையில் தடை மீறி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வால்பாறை: கொரோனா பரவல் கட்டுப்பாடால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 3 சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆழியார், அட்டகட்டி, சோலையார் அணை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பும் உள்ளது. அதையும் தாண்டி டிமிக்கி கொடுத்த சுற்றுலாப் பயணிகள் கார்களின் வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக வலம் வந்தனர்.

சோலையார் அணை, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் நேற்று அதிக அளவில் காணப்பட்டது.  இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வால்பாறை கூழாங்கல் ஆற்றில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆற்றில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் குத்து பாடல்கள் வாகனங்களில் போட்டு ஆட்டம் போட்டனர். சுற்றுப்பயணிகளால் வால்பாறையில் நேற்று  கூட்டம் அலைமோதியது.

Related Stories: