வால்பாறை: கொரோனா பரவல் கட்டுப்பாடால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 3 சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆழியார், அட்டகட்டி, சோலையார் அணை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பும் உள்ளது. அதையும் தாண்டி டிமிக்கி கொடுத்த சுற்றுலாப் பயணிகள் கார்களின் வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக வலம் வந்தனர்.