மதுரை: ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.