சென்னை: தாம்பரம் இரும்புலியூரில் தண்டவாளத்தில் இறங்கி பொதுமக்கள் 200 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக தண்டவாளத்தை கடந்து சென்று வந்த நிலையில், தற்போது ரயில்வே சுவர் கட்டியதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்று ஏற்பாடாக சுரங்கப்பாதை அமைத்து, இரும்புலியூர் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.