சென்னை: பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழ்நாடு நீண்ட கடலோரப் பகுதியையும், பெரிய மீனவர் சமூகத்தையும் கொண்ட மாநிலம். ரூ.6,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடன், கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரண நிதிக்காகவும் சிறப்பு நிதிக்காகவும் கடல்சார் மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காகவும் மொத்த தொகையாக ரூ.303.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுக திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை விரைந்து நிறைவு செய்யப்படும்.