ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம், திருவி.க நகர், துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (24). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவடி, சிந்து நகரை சார்ந்த 21 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை வைத்து, தனது தனியார் வங்கி கணக்கையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் இளம்பெண்ணை ஆன்லைனில் விபச்சாரத்துக்கு அழைப்பது போல ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி செய்தி வெளியிட்டுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் அந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.