டுவிட்டரில் பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பு: சிக்கினார் கம்பெனி ஊழியர்

ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம், திருவி.க நகர், துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (24). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவடி, சிந்து நகரை சார்ந்த 21 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை வைத்து, தனது தனியார் வங்கி கணக்கையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் இளம்பெண்ணை ஆன்லைனில் விபச்சாரத்துக்கு அழைப்பது போல ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி செய்தி வெளியிட்டுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் அந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து இளம்பெண், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். ஆவடி காவல் நிலையத்துக்கு அந்த புகாரை அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்திக்ராஜாவை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: