சென்னை: வருகின்ற 23ம் தேதி முதல் 27 வரை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டங்களில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார். ரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வருகின்ற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளிலும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற இருக்கிறது.