சென்னை: சென்னை விருகம்பாக்கம், செல்வகணபதி நகரை சேர்ந்தவர் எஸ்தர் வினிதா (38). அதே பகுதி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த கிருஷ்ணா (36). டாக்டர்கள். இருவரும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் எஸ்தர் வினிதா, கிருஷ்ணா ஆகியோர் சிதம்பரத்தில் இருந்து காரில் சென்னை புறப்பட்டனர். காரை கிருஷ்ணா ஓட்டினார். காலை சுமார் 7 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த வெண்ணாங்குப்பட்டு அருகே கொளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.