திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 42 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூரில் உள்ள ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், காவேரிராஜபுரத்தில் உள்ள ஜிஎன்கே பவுண்டேசன் மற்றும் சேவியர் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைந்து திருவாலங்காடு, பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி ஒன்றியங்களில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 5 மற்றும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 42 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது.