திருவள்ளூர்: திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஜி.ஜெயபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். அப்போது, மக்களிடம் கொள்ளையடித்து முதலாளிகளை வளமாக்கும் பாஜக அரசின் கொள்களை கண்டித்தும், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பெறக் கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.