கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இன்று காலை இந்திரா துணி துவைத்து, அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் காய வைக்க முயன்ற போது கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் இந்திரா, மகாலட்சுமி, 2 வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.