சென்னை: தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருபவர் வர்ஷினி. இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பிளேடால் வர்ஷினியை கிழித்துள்ளார். மேலும் அவரது கழுத்ைத அறுக்க முயன்றார். வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்ததால், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், இதுபற்றி மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசாரிடம், அந்த வாலிபரை ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த வர்ஷினியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.