சென்னை: கலைஞர் நினைவு நாளையொட்டி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’யில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் கலைஞர் நினைவு நாளையொட்டி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பெறப்பட்ட மொத்தம் 2,581 மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இவற்றில் இருந்து 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.