கலைஞர் நினைவு நாளையொட்டி இன்று மாரத்தான் போட்டி: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளில் பன்னாட்டு மெய்நிகர்  மாரத்தான் ஓட்டத்தின் முதல் பதிவை திமுக தலைவர் கடந்தாண்டு தொடங்கி  வைத்தார். இதில், 28  நாடுகளிலிருந்தும்,  இந்தியாவின்  11 மாநிலங்களிலிருந்தும் 8,541 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு நாளில், பன்னாட்டு  மெய்நிகர் மாரத்தான் - இணையவழி  - 2ம் ஆண்டு மாரத்தான் முதல் பதிவை திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று (7ம் தேதி) மாலை 5 மணியளவில் மெரினாவில் தொடங்கி  வைக்கிறார். உலகத்தின்  எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக  பதிவு செய்து இதில் பங்கேற்க முடியும். அதற்கான சான்றிதழ் இணையம் வாயிலாகவும், பதக்கங்கள் அந்தந்த  மாவட்டங்களிலேயே வழங்கப்பட உள்ளது.நுழைவு கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. இந்த நிதி கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரிடம்  வழங்கப்பட உள்ளது.

Related Stories: