பென்னாகரம் அருகே தொழுவத்தில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கல்-அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தர்மபுரி : பென்னாகரம் அருகே மாட்டுத்தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பென்னாகரம் அருகே, ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய  தகவல் வந்தது. அதன்படி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர், பென்னாகரம் புதுப்பட்டி கிராமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சாலையோரம் இருந்த மாட்டுத்தொழுவத்தில், 58 மூட்டைகள் கொண்ட சுமார் 3டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, பென்னாகரம் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மாட்டுத் தொழுவத்தில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: