காய்கறி, கீரைகள் விற்பனை மையம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம்:  ராமநாதபுரத்தில் தோட்டக்கலை காய்கறி, கீரைகள் விற்பனை சிறப்பு மையத்தை கலெக்டர் சந்திரகலா துவக்கி வைத்தார்.  ராமநாதபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காக்களில் தக்காளி, வெண்டை, மிளகாய், வெங்காயம், பாகற்காய், புடலங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், தண்டங்கீரை, அரைக்கீரை, அகத்திக் கீரை, மிளகு தக்காளி கீரை, முருங்கைக்கீரை, வல்லாரை, பிரண்டைக் கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகள் முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் காய்கறிகள், கீரை வகைகளை அந்தந்த தோட்டக்கலை பூங்காக்களுக்கு அருகே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காவில் விளையும் காய்கறிகள், கீரைகள் விற்பனை சிறப்பு மையத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சந்திரகலா துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரவீன் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரைச் செல்வி, கணேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: